சுருக்கம்:
தமிழ் பக்தி இலக்கியங்களில் பெண்களின் பங்களிப்புகள், அவர்களின் அனுபவங்கள் மற்றும் பெண்ணியப் பரப்பில் பக்தி இலக்கியங்களின் செல்வாக்குகள், பெண் மொழி என்பன குறித்து ஆண்டாளின் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டு இங்கு ஆராயப்படுகின்றது. பெண்ணிய நோக்கில் ஆண்டாளின் பாசுரங்களை எடுத்து ஆராய்வதனை நோக்காகக் கொண்டமையும் இவ் ஆய்வில் ஆண்டாள் போன்ற பெண்சாhர்ந்த படைப்புக்களின் படைப்பு முறைமைகள், இலக்கியக் கருப்பொருள், வெளியீட்டு உத்திகள், மொழிநடை, இலக்கிய மரபுகள் என்பன பற்றியும் எடுத்து நோக்கப்படுகின்றது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் முதன்மையான பெண் படைப்பாளிகளில் ஒருவராக ஆண்டாள் விளங்குகின்றார். நாயன்மார்களும் ஆழ்வார்களும் அவைதிகமத நெறிகளுக்கு எதிராகப் பக்திசார்ந்த அமைப்புக்களாக நின்று செயற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஒரேயொரு பெண் ஆழ்வாராக ஆண்டாள் அடையாளம் காணப்படுகின்றார். ஆண்டாள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை எனும் இரு நூல்களைப் பாடியுள்ளார். இவரின் படைப்புக்கள் பக்தி, காதல் என்ற தளங்களுக்கும் அப்பால் சென்று பெண்கள் குறித்த ஆண் நோக்கிலான பார்வையிலிருந்து விலகிய பெண்நிலைசார்ந்த அதாவது பெண்ணியநிலைசார்ந்த, பெண் பார்வையிலான பெண்மையப் படைப்புக்களாகவும், பெண்ணின் தன்நிலைக் குரலாகவும் தமிழ்ப் படைப்புத்தளத்தில் முக்கியமான பதிவுகளை நிகழ்த்தியுள்ளன.
|
துணைநூற்பட்டியல்:
[1] அருந்தாகரன், க., (1999), ஆண்டாளின் ஆளுமை - சில குறிப்புகள், யாழ்ப்பாணம்.
[2] கோவிந்தராசமுதலியார், க. ரா., (1975), ஆழ்வார்கள் வரலாறு, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
[3] சங்கர நாராயணன், சி.டி.,(2006), நாச்சியார் திருமொழி, சென்னை: முல்லை நிலையம்.
[4] சண்முகசுந்தரம், வ., (1992), திருப்பாற்கடல், சண்முகம் பதிப்பகம்.
[5] சாயப்பு மரைக்காயர், மு.,(2005), ஆண்டாள் இலக்கியத் திறன், கங்கை புத்தக நிலையம்.
[6] சிதம்பரனார், சாமி., (1960), ஆழ்வார்கள் அருள்மொழி, சென்னை: தமிழ்ப் புத்தகாலயம்.
[7] சுப்புரெட்டியார், ந., (1987), ஆழ்வார்களின் ஆரா அமுது, ஐந்திணைப் பதிப்பகம்.
[8] செல்வி திருச்சந்திரன்., (1997), தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்ணிலை நோக்கு, குமரன் பதிப்பகம், சென்னை.
[9] தாமோதரன், கு., (1978), ஆழ்வார்கள் திருவுள்ளம், பூங்கொடி பதிப்பகம்.
[10] தில்லைநாதன், சி., (1967), வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
[11] பைம்பொழில் மீரான், (2007), தலைநிமிர்ந்த தமிழச்சிகள், தோழமை வெளியீடு.
[12] மணவாளன், கே. ஏ., (1990), ஆண்டாள், சாகித்திய அக்காதெமி.
[13] நம்மாழ்வார்., (1966), திருவாய் மொழி தெளிவுரை, சேகர் பதிப்பகம்.
[14] நாரயண வேலுப்பிள்ளை, எம்.,(2000), பன்னிரு ஆழ்வார்களும் அவர்கள் அருளிய பிரபந்தங்களும், நர்மதா வெளியீடு.
[15] ராஸ்கௌதமன்., (1997), அறம் அதிகாhரம், சென்னை.கட்டுரைகள்:
[16] Pயடயnலையிpயnஇ ஆ.இ (2003)இ PநNNலைய ஏயயளippரஅ PநNநேணாரவாவாரஅஇ முயயஎலய Pயவாippயமயஅ.
[17] Pசயடியாயசiஇ மு.இ (1987)இ யுயனெயயட யசரடiஉh உhநலவாய யேயஉhஉhலையயச வுhசைரஅழணாiஇ ஆழாயn Pயவாiரிpயமயஅ
[18] Pசநஅயஇ சு.இ (1998)இ PநNNலையஅ - யுரெபரஅரசயமையடஇ ஊhநnயெi: வுயஅடை Pரவாவாமயடயலயஅ.
[19] ஆயாயசயளயnஇ (2010)இ Pநnஅழணாi ஐலயபெலையடஇ ஊhநnயெi: வுhழணாயஅயi ஏநடலைநநனர.
|